"எப்போதும் பெண்" என்ற இந்தத் தலைப்பு மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு சொந்தமானது. அவர் மங்கையர் மலரில் இருபது வருடங்களுக்கு முன் எழுதிய அற்புதத் தொடர் அது.
இத்தலைப்பில் அவர் எழுதியது ஒரு பெண்ணைப் பற்றி, அவள் உருவானது முதல் இறப்பது வரை.... சுஜாதாவின் தலைசிறந்த படைப்பு எனலாம் இதனை.
கடவுளின் அற்புதப் படைப்பு என்ன என்றால், என் கருத்தில் மறுப்பேதும் இல்லாமல் "பெண்" என்பேன்.
நான் இந்த blog-ல் எழுத நினைப்பது ஒரு பெண்ணின் சரித்திரம் அல்ல....நான் கடந்து வந்த பல பெண்களைப் பற்றி.....
Oops.... என்ன புருவத்தை நெறிக்கிறீர்கள்? இவர்கள் என் காதலிகள் அல்ல...! நான் வியந்து மதிக்கும் பெண்கள். அவர் என் தாயாய், தாரமாய், தோழியாய், பாட்டியாய், அத்தையாய் அல்லது நான் சந்தித்த யாரோ ஒருவராய் இருக்கலாம்.
அவர்களின் அன்பு, பொறுமை, அவர்கள் வகுத்து வாழ்ந்த நேர்மை, நான் விரும்பிய ஆனால் என்றும் பின்பற்றாத அவர்கள் வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மை, கோபம் என நான் வியந்த விஷயங்கள் ஏராளம் ஏராளம்.
அவ்வப்போது எழுதுகிறேன். நேரம் இருக்கையில் படியுங்கள்.