Monday, October 5, 2009

ஆண்டாள் - 1

"பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க"-

- கவிப்பேரரசு வைரமுத்து (ஜேஜே)

ஆண்டாள் நாம் அனைவரும் அறிந்த பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர். விஷ்ணு பக்தை, திருப்பாவை தந்தவர், திருவில்லிப்புத்தூரில் வளர்ந்தவர், திருவரங்கன்பால் மையல் கொண்டு அவனோடு இறுதியில் ஐக்கியம் ஆனவர் என்பதெல்லாம் நம்மில் பலர் அறிந்தது.

ஆனால் பெண்மை என்ற அந்த "மை" அவருக்குத் தந்த உபத்திரவங்கள் (ஆங்கிலத்தில் challenges எனலாம் என நினைக்கிறேன்) ஏராளம் ஏராளம்.

அந்த உண்மையான ஆண்டாளின் பால் எனக்கான admiration-ஐ நான் எழுதும் முன், நம்மில் ஒருவராய் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானு கோடி ஆண்டாள்களில் ஒரு சிலர் பற்றி எழுத விரும்புகிறேன். அதுவே ஆண்டாள் - 1 உருவாகும் கதை.

அந்த அஷ்டாவதானிப் பெண்.

சிலப்பல வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்த காலனியில் ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் எனக்கு தெரியவில்லை. வயதுக்கு மீறிய வளர்த்தியுடன் அப்படியும் இப்படியும் வளைய வருவாள். எங்கள் நண்பர்கள் குழாம் அவளைக்கடக்கும் பொது எங்கள் பார்வை என்றைக்கும் அவள் கழுத்திற்கு மேலே போனதில்லை. எங்களைப் போல் விடலைப் பயல்களைக் அவள் கடக்கையில் அவள் முகம் ஒரு விதமாய், நவ ரசங்களிலும் அடக்க முடியாத முக பாவனையுடன் தவிப்புடன் இருக்கும். "ரொம்ப பண்றாடா" என்பது போன்ற இன்னும் இன்னபிற comments-உடன் நாங்கள் அவளைக் கடப்போம்.

ஒரு நாள் அவள் வீட்டில் இருந்து ஒரு அழைப்பிதழ், எங்கள் காலனியில் எல்லோர் வீட்டிற்கும் வந்தது. "டேய், அவ இப்போதானா வயசுக்கு வந்தா?" என் அன்புத் தோழனின் ஐயம்.

ஆர்வமாய் பிரித்தால், அது அவள் "நடன அரங்கேற்ற அழைப்பிதழ்". அவள் யார் யாரிடம் எங்கெங்கே என்னென்ன கற்றாள், இந்த விழா யார் தலைமையில் எங்கே நடக்கிறது என்பதை எல்லாம் படிக்கையில் தலை கிறுகிறுவென்றது. அவளைப் பற்றிய அறிமுகத்தை பெரிய பெரிய நடன சிரோன்மானிகளும், அவள் பாடும் திறமை பற்றி கர்நாடக சங்கீதத்தில் மேதைகளும் அழைப்பிதழில் சொல்லி இருந்தனர். ஆஹா என்றிருந்தது எனக்கு.

இத்தனை வருடத்திற்குப் பின்னும் இப்போதும் எங்கேனும் அவள் எங்கள் எதிரில் கடந்தால் நாங்கள் வேறு புறமாய் திரும்பி விடுவதுண்டு. அவளை எதிர் நோக்கும் அருகதையும் எங்களுக்கு இருப்பதாய் நாங்கள் நினைக்கவில்லை.

பெண் மார்புக்குள் மனசு மட்டுமா இருக்குது, இன்னும் என்னென்ன தெறமையோ ஒளிஞ்சிட்டு இருக்கு சார். கொஞ்சம் அதையும் பாருங்க.....!!!

Saturday, August 8, 2009

இளவழகி









- யாருடைய ஓவரின் கடைசி பந்தில் மியான்டாட் சிக்ஸ் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெறச்செய்தார்?
- யுவராஜ் பந்தில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர் அடித்தது யார்?
இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் என்னால் எளிதில் பதில் சொல்ல முடியும். இளவழகி யார் தெரியுமா என்று என் ஜூனியர் ஒருவன் ஆபீஸில் கேட்டபோது விழித்தேன்.
இந்தப் பெண் நான் வாழும் அதே அழுக்கு நிறைந்த வட சென்னையில் வாழ்பவள்.
ஒரு ரிக்ஷாக்காரரின் மகள்.
ஒரு குடிசைவாசி.

இவையெல்லாம் அல்ல இவளது identity. இவள் 2009-ஆம் ஆண்டின் உலக கேரம் சாம்பியன். வியாசர்பாடியைத் தாண்டி, சென்னை டிவிஷன்-ஐ கடந்து, மாநிலங்களை வென்று அதன் பிறகே இந்தப் பெண் தாய்லாந்து சென்றிருப்பாள், கோப்பையை வெல்ல.

வட சென்னையிலேயே வாழ்ந்து கொண்டு அதையே திட்டிக் கொண்டு (refer: என் முந்தைய blog), பலரைப் போல் என் அப்பன் எனக்கு ஒண்ணும் செய்யலை எனப் புலம்பும் நான் யோசித்துப் பார்க்கிறேன், இந்தப் பெண்ணிற்கு என்ன இருந்தது? திறமை? அது நம்மில் எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் இருக்கத்தான் செய்கிறது. பின்னே என்ன?
எனக்குத் தெரிந்து அது முயற்சியும் தன் தன்னம்பிக்கையும்தான். இந்தப் பெண் கூட நம்மை inspire செய்ய வில்லை என்றால் யார்தான் செய்வார்கள்?