Saturday, August 8, 2009

இளவழகி









- யாருடைய ஓவரின் கடைசி பந்தில் மியான்டாட் சிக்ஸ் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெறச்செய்தார்?
- யுவராஜ் பந்தில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர் அடித்தது யார்?
இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் என்னால் எளிதில் பதில் சொல்ல முடியும். இளவழகி யார் தெரியுமா என்று என் ஜூனியர் ஒருவன் ஆபீஸில் கேட்டபோது விழித்தேன்.
இந்தப் பெண் நான் வாழும் அதே அழுக்கு நிறைந்த வட சென்னையில் வாழ்பவள்.
ஒரு ரிக்ஷாக்காரரின் மகள்.
ஒரு குடிசைவாசி.

இவையெல்லாம் அல்ல இவளது identity. இவள் 2009-ஆம் ஆண்டின் உலக கேரம் சாம்பியன். வியாசர்பாடியைத் தாண்டி, சென்னை டிவிஷன்-ஐ கடந்து, மாநிலங்களை வென்று அதன் பிறகே இந்தப் பெண் தாய்லாந்து சென்றிருப்பாள், கோப்பையை வெல்ல.

வட சென்னையிலேயே வாழ்ந்து கொண்டு அதையே திட்டிக் கொண்டு (refer: என் முந்தைய blog), பலரைப் போல் என் அப்பன் எனக்கு ஒண்ணும் செய்யலை எனப் புலம்பும் நான் யோசித்துப் பார்க்கிறேன், இந்தப் பெண்ணிற்கு என்ன இருந்தது? திறமை? அது நம்மில் எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் இருக்கத்தான் செய்கிறது. பின்னே என்ன?
எனக்குத் தெரிந்து அது முயற்சியும் தன் தன்னம்பிக்கையும்தான். இந்தப் பெண் கூட நம்மை inspire செய்ய வில்லை என்றால் யார்தான் செய்வார்கள்?